ஆசியா

இரண்டு ஹமாஸ் தளபதிகளை பயங்கரவாத பட்டியலில் சேர்த்த ஐரோப்பிய ஒன்றியம்

கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீதான இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து இரண்டு ஹமாஸ் தளபதிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சேர்த்துள்ளன. ஹமாஸின் இராணுவப் பிரிவின் கமாண்டர் ஜெனரல் மொஹமட் டெய்ஃப் மற்றும் அவரது துணை மர்வான் இசா ஆகிய இரு நபர்கள் ஆவர். வெள்ளிக்கிழமை முதல், இரு தளபதிகளும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் உள்ள அவர்களது நிதி மற்றும் பிற நிதி சொத்துக்களை முடக்குவதற்கு உட்பட்டுள்ளனர், அதே நேரத்தில் அவர்களுக்கு […]

ஆசியா செய்தி

மஹ்சா அமினியின் குடும்பத்திற்கு ஈரானை விட்டு வெளியேற தடை

  • December 9, 2023
  • 0 Comments

காவலில் இறந்த ஈரானிய குர்திஷ் பெண்ணான மஹ்சா அமினியின் குடும்பத்தினர், மரணத்திற்குப் பின் வழங்கப்படும் உயர்மட்ட உரிமைகள் பரிசைப் பெறுவதற்காக பிரான்ஸ் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது வழக்கறிஞர் தெரிவித்தார். இஸ்லாமியக் குடியரசின் பெண்களுக்கான கடுமையான ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி ஈரானின் மதப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 16, 2022 அன்று 22 வயதில் அமினி இறந்தார். அவர் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் கூறுகின்றனர். ஈரானிய அதிகாரிகள் அவர் முன்பு தெரிவிக்கப்படாத […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் தற்கொலை

  • December 9, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள நாஷுவாவில் 37 வயதான ஜாரெட் புக்கர் என்ற போதகர், சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி தனது தேவாலயத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டார். புக்கர் நஷுவா பாப்டிஸ்ட் தேவாலயத்தில் இருந்து, குற்றச்சாட்டுகள் வெளிப்படுவதற்கு முன்பு, நவம்பர் 25 அன்று அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். விசாரணையைச் சுற்றியுள்ள விவரங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் குறிப்பிட்ட தன்மை தெளிவாக இல்லை. இந்த சோகம் தேவாலய சமூகத்தின் மீது […]

ஐரோப்பா

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் அதிபர் தேர்தல் நடத்த ரஷ்ய திட்டம்: உக்ரைன் கண்டனம்

ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் அடுத்த வசந்த காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ரஷ்ய திட்டங்களை உக்ரைன் கண்டித்துள்ளது, அவற்றை “பூஜ்ய மற்றும் செல்லாது” என்று அறிவித்தது மற்றும் அவற்றை கண்காணிக்க அனுப்பப்படும் பார்வையாளர்கள் மீது வழக்குத் தொடர உறுதியளித்துள்ளது. ரஷ்யாவின் மேல்சபை இந்த வாரம் நாட்டின் ஜனாதிபதித் தேர்தலை அடுத்த மார்ச் மாதம் நிர்ணயித்துள்ளது , மேலும் நான்கு ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரேனிய பிராந்தியங்களில் வசிப்பவர்கள் முதல் முறையாக வாக்களிக்க முடியும் என்று தலைவர் வாலண்டினா மத்வியென்கோ கூறியுள்ளார்.

பொழுதுபோக்கு

தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் உருவாகும் ஈமெயில்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடு

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்தநிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை […]

விளையாட்டு

தனது ஓய்விற்கான காரணத்தை வெளியிட்ட பிரபல தென்ஆப்பிரிக்க வீரர்

  • December 9, 2023
  • 0 Comments

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டிலும், சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் நீங்கா இடம் பெற்றவர்களில் ஏபி டி வில்லியர்ஸ் ஒருவர் என்றால் மிகையாகாது. 2004-ல் தனது 20 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். விக்கெட் கீப்பர், அதிரடி பேட்ஸ்மேன் என முத்திரை பதித்து 2018-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் மூன்று வருடங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடினார். டி வில்லியர்ஸ் 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில விளையாடி 20,014 ரன்கள் […]

இலங்கை

இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கொரொனா அச்சுறுத்தல் காலத்தில் ஆசிரியர்களிடமிருந்து ஓரு நாள் சம்பளத்தை மீளப்பெறல் என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து பெறப்பட்ட 32.778 மில்லியன் ரூபா பணம் மீண்டும் அதிபர்கள் ஆசிரியர்களிடம் 17 கல்வி வலயங்களுக்கும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை பெறாதவர்கள் பெற்றுக்கொள்ளுமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார். ம்ட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை […]

இலங்கை

ஹட்டனில் பள்ளிவாசல் ஒன்றில் திருட்டு சம்பவம் – காவலாளி அடித்து கொலை

  • December 9, 2023
  • 0 Comments

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது இன்று (09) அதிகாலை நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் அவர் பலியாகியுள்ளார். அத்துடன், பள்ளிவாசலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது. ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரு வருடங்களாக காவலாளியாக பணியாற்றிவரும் ஹட்டன், ஹிஜிரபுர பகுதியைச் சேர்ந்த சி.எம். இப்ராஹிம் ( 67) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.அவரின் தலைப்பகுதியிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. “அதிகாலை ஒரு மணியளவில் சுவர் ஏறி குதித்து பள்ளிவாசலுக்கு வந்த நபரொருவர், காவலாளியின் ஓய்வறைக்கு சென்றுள்ளார். பின்னர் வெளியே […]

ஐரோப்பா

இத்தாலியில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து : நான்கு பேர் உயிரிழப்பு

  • December 9, 2023
  • 0 Comments

இத்தாலி தலைநகர் ரோம் அருகே டிவொலி பகுதியில் மருத்துவமனையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையின் மேல்தளத்தில் தீ வேகமாக பரவியதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்புக்குழுவினரால் மருத்துவமனையில் சிக்கித்தவித்த நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்றினர்.ஆனாலும் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு சிலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

இலங்கை

இலங்கை முழுவதும் திடீர் மின்சார தடை: இலங்கை மின்சார சபை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இலங்கை  நாடு முழுவதும் இன்று(09) மாலை திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளது. திடீர் மின் தடை காரணமாக நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டமைப்பில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை நிவர்த்தி செய்ய இலங்கை மின்சார சபை நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றது. இந்நிலையில் தற்போது பல பகுதிகளில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்த இலங்கை மின்சார சபை, ஏனைய அனைத்துப் […]

error: Content is protected !!