விளையாட்டு

விராட் கோலியின் சாதனையை முறியடிக்க முயற்சிக்கும் சூர்யகுமார்

  • December 12, 2023
  • 0 Comments

சர்வதேச டி20 போட்டியில் விராட் கோலியின் நீண்ட கால சாதனையை சமன் செய்யவுள்ளார் சூர்யகுமார் யாதவ். ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த உடனே, இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் ஒதுக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான களமிறங்கிய இளம் அணி 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது. இந்த தொடரை தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பயனர்களை அச்சுறுத்தும் Spam mail – அறிமுகமாகும் புதிய அம்சம்

  • December 12, 2023
  • 0 Comments

ஸ்பேம் ஈமெயில்களில் இருந்து பயனர்களை காக்கும் விதமாக ஜிமெயில் யூசர்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைத்துள்ளது. பலகாலமாகவே ஜிமெயில் பயனர்கள் சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால் அது ஸ்பேம் மெயில்கள்தான். பயனர்களின் இன்பாக்ஸுக்கு வரும் போலியான மெயில்களை குறைக்கும் முயற்சியில் ஜிமெயில் வேலை செய்து வருகிறது. இதற்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சியில் ஸ்பேம் மெயில்களை கண்டறிவதில் 38 சதவீதம் சிறப்பாக செயல்படுகிறது என்பது தெரிகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு பயன்ர்களுக்கு ஸ்பேம் மெயில்களை கண்டுபிடித்து […]

ஐரோப்பா

பிரான்ஸில் இளம் பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த மர்ம நபர்கள்

  • December 12, 2023
  • 0 Comments

பிரான்ஸில் இளம் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான 26 வயதுடைய பெண், நான்கு மாத கர்ப்பிணி என தெரியவந்துள்ளது. யூத பெண் எனும் ஒரு காரணத்துக்காக அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள அப்பெண்ணின் வீட்டில் கடந்த நவம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தாக்குதலாளிகள் இவ்வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். காலை 11 மணி அளவில் அப்பெண்ணின் வீட்டின் கதவை அவர்கள் தட்டியுள்ளனர். கதவு திறக்கப்பட, எதிரே […]

செய்தி

ஜெர்மனி இளைஞர்கள் இராணுவத்தில் கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்படும் அபாயம்

  • December 12, 2023
  • 0 Comments

ஜெர்மனி இளைஞர்கள் இராணுவத்தில் கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டில் கட்டாய இராவ சேவையானது 2011 ஆம் ஆண்டுக்கு முன் காணப்பட்டு இருந்தது. ஆனால் 2011 ஆம் ஆண்டு ஜெர்மனியில் கட்டாய இராணுவ சேவையானது இடை நிறுத்தப்பட்டு இருந்தது. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக சோவியத் யுனியனில் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருந்த நாடுகளில் சுதந்திரமான முறையில் தனி நாடாக மாறிய பிறகு இராணுவத்துடைய நிலைப்பாட்டில் சில இணக்கங்கள் ஏற்பட்டு இருந்தது. அதாவது எல்லை நாடுகளில் […]

ஆசியா

சிங்கப்பூரில் வேகமாக அச்சுறுத்தும் கொரோனா தொற்று!

  • December 12, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த இரு வாரங்களாக இந்த தொற்றாளர்கள் பதிவாகியுள்ளது. எனினும் உள்ளூரில் பரவும் கொரோனா வகைகள் மேலும் வேகமாகத் தொற்றுவதாகவோ, மேலும் கடுமையான நோயை ஏற்படுத்துவதாகவோ எவ்வித அறிகுறியும் இல்லை. நவம்பர் 26ஆம் திகதி முதல் இம்மாதம் 2ஆம் திகதி வரை சுமார் 32,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதற்கு முந்திய வாரம் அந்த எண்ணிக்கை சுமார் 22,000ஆக இருந்தது. தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 225 ஆகும். […]

இலங்கை

கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவால் சர்ச்சை!

  • December 12, 2023
  • 0 Comments

கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்டி, கொட்டாஞ்சேனை, மட்டக்குளிய மற்றும் மோதர பொலிஸ் எல்லைகளுக்குள் மீண்டும் பதிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றில் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார். இவ்வாறான பதிவு நடவடிக்கைள் ஏன் இடம்பெறுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியிருந்தார். யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னரும் கொழும்பில் வசிக்கும் தமிழர்களிடம் பொலிஸார் விபரம் கோருவது குறித்தும் மனோ கணேசன் கேள்வியெழுப்பியிருந்தார். மேலும் குறித்த விபரத்தில் என்ன சமயத்தவர் என்று கேட்பது தீபாவளி பொங்கலுக்கு […]

ஆப்பிரிக்கா செய்தி

கிழக்கு காங்கோவில் பெய்து வரும் கனமழையால் 14 பேர் பலி

  • December 11, 2023
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் ஒரே இரவில் புகாவு நகரில் பெய்த மழையால் நிலச்சரிவுகள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இபாண்டாவின் புகாவு கம்யூனில் கொல்லப்பட்டனர், அங்கு மழையின் கீழ் இடிந்து விழுந்த தற்காலிக வீடுகளில் பலர் வசிக்கின்றனர் என்று கம்யூனின் மேயர் ஜீன் பலேக் முகாபோ தொலைபேசி மூலம் தெரிவித்தார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருவதால் பலி […]

உலகம் செய்தி

‘தங்க மகள்’ – கிம்மைத் தொடர்ந்து வட கொரியாவை ஆளப்போகும் பத்து வயது?

  • December 11, 2023
  • 0 Comments

  வடகொரியாவின் அடுத்த ஆட்சியாளர் யார்? உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தக் கேள்விக்கான பதில் தற்போது கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவரது பத்து வயது மகள் கிம் ஜூ, கிம்மின் வாரிசாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்திலும் ராணுவத்திலும் ஆண் ஆதிக்கம் செலுத்தும் வடகொரியாவின் வரலாற்றை கிம் ஜூ தலைகீழாக மாற்றுவாரா அல்லது இது கிம்மின் உத்தியா என்பது சந்தேகமே. தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை (NIS) முன்பு கிம்மிற்கு பிறகு, அவரது […]

ஆப்பிரிக்கா செய்தி

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதர்கள் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற சூடான் உத்தரவு

  • December 11, 2023
  • 0 Comments

சூடானின் பாதுகாப்பு அமைச்சகம் 15 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. இராஜதந்திரிகளை 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் தனிப்பட்ட கிராட்டா (அனுமதிக்க முடியாத நபர்) என அறிவிக்கப்பட்டதாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் அமைச்சகத்தின் முடிவுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் சூடான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சூடானிய இராணுவத் தளபதியும், உயர்மட்ட ஜெனரலும், இரண்டாவது கட்டளைத் தளபதியுமான யாசர் […]

ஐரோப்பா செய்தி

30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ளும் 3 கியூபா நாட்டினர்

  • December 11, 2023
  • 0 Comments

அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டதற்காக மூன்று கியூபா நாட்டவர்களுக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்நோக்குகின்றனர், அரசு நடத்தும் ஊடகங்கள், தாக்குதல்களில் அதிகாரிகள் கியூபாவிற்கு வெளியில் இருந்து நிதியுதவி செய்யப்பட்டதாகவும் தீவின் அரசாங்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்திற்காகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மத்திய ஹவானா நீதிமன்றத்திற்கான வழக்குக் கோப்புகளை வைத்திருக்கும் கட்டிடத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதாகக் கூறப்படும் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்களுக்கு 20 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்குமாறு வழக்கறிஞர்கள் […]

error: Content is protected !!