இலங்கை செய்தி

இலங்கையில் ஒரு நபருக்கான மாதாந்திர செலவு குறைந்துள்ளது

  • September 19, 2023
  • 0 Comments

ஜூலை 2023க்கான மாதாந்திர வறுமைக் கோடு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை மூலம் இது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் ஒருவர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு மாதத்திற்கு 15,978 ரூபாவைச் செலவிட வேண்டியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய மதிப்பாகக் காட்டப்படும் இந்த மதிப்பு ஜூன் 2023 இல் 16,089 ரூபாயாகப் பதிவு செய்யப்பட்டது. ஜூலை 2023 இல் மேற்கண்ட புள்ளிவிவரத்தின்படி, நான்கு பேர் கொண்ட ஒரு […]

செய்தி விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் சண்டையிட்டுக்கொள்ளவில்லை

  • September 19, 2023
  • 0 Comments

2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தீர்க்கமான அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இந்த அரையிறுதி போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கும், வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த தகவல் பொய்யானது என்றும், இவை அனைத்தும் வதந்திகள் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் […]

ஐரோப்பா செய்தி

நவ-நாஜி குழு ஹேமர்ஸ்கின்ஸை தடை செய்த ஜேர்மனி

  • September 19, 2023
  • 0 Comments

அதிவலது கச்சேரிகளை ஒழுங்கமைப்பதிலும் இனவெறி இசையை விற்பதிலும் அதன் பங்கிற்கு பெயர் பெற்ற நவ-நாஜி குழுவான ஹேமர்ஸ்கின்ஸை ஜெர்மனி தடை செய்துள்ளது. இந்த நடவடிக்கை “இனவெறி மற்றும் யூத விரோதத்திற்கு எதிரான தெளிவான சமிக்ஞை” என்று ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் கூறினார். நாடு முழுவதும் உள்ள 28 முன்னணி உறுப்பினர்களின் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 1980களின் பிற்பகுதியில் அமெரிக்காவில் நிறுவப்பட்ட ஹேமர்ஸ்கின்ஸ், ஜெர்மனியில் சுமார் 130 உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. ஜேர்மன் அதிகாரிகள் இந்த தடையை […]

இலங்கை செய்தி

போராட்டத்தின் போது சொத்து சேதம் அடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 1,414 மில்லியன் இழப்பீடு

  • September 19, 2023
  • 0 Comments

போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை சேதப்படுத்தியமைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய நட்டஈடு தொகை 1,414 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 31 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே 714 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி முதல் ஜூலை 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் செயல்களால், அப்போதைய ஆளும் கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், உடைமைகள் எரித்து நாசமாக்கப்பட்டன. இவ்வாறு சொத்துக்களை சேதப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு […]

இலங்கை செய்தி

விசா இன்றி குவைத்தில் தங்கியிருந்த இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்

  • September 19, 2023
  • 0 Comments

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் சுமார் 2,000 பேர் இலங்கைக்கு வருவதற்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைக் குறிப்பிட்டுள்ள குவைத் தூதரகத்தின் பேச்சாளர், படிப்படியாக அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி இலங்கைக்கு வரமுடியாமல் தங்கியிருந்த 31 இலங்கையர்கள், அங்குள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக விமான அனுமதியின் கீழ் இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளனர். அவர்களும் இலங்கைக்கு வருவதற்காக குவைத்தில் […]

உலகம் செய்தி

உக்ரேனில் மனிதாபிமான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ரஷ்ய ஆளில்லா விமானம் தாக்குதல்

  • September 19, 2023
  • 0 Comments

மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் நகரில் மனிதாபிமான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு வளாகம் ரஷ்ய போர் விமானங்களை பயன்படுத்தி தாக்கப்பட்டுள்ளது. அங்கு பெரும் தீவிபத்து ஏற்பட்டதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் உக்ரைன் பிராந்திய அதிகாரி வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. லிவிவ் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர், நகரத்தை நோக்கிச் சென்ற 15 ரஷ்ய ஆளில்லா விமானங்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியதாகக் கூறினார், ஆனால் மூன்று ட்ரோன்கள் வான் பாதுகாப்பு அமைப்பைக் கடந்து […]

உலகம் செய்தி

உலகளாவிய ‘குழப்பத்திலிருந்து’ விடுபட ஆட்சியாளர்கள் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்!! ஐநா

  • September 19, 2023
  • 0 Comments

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78வது அமர்வு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் தொடங்கியது. பொதுச் சபை அமர்வுடன் இணைந்து நடத்தப்படும் 2023 நிலையான அபிவிருத்தி இலக்குகள் உச்சிமாநாட்டின் அரச தலைவர்களின் உச்சி மாநாட்டும் ஆரம்பமாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ், மக்கள் செயற்படுவதற்குத் தலைவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தற்போதைய உலகளாவிய ‘குழப்பத்திலிருந்து’ விடுபட ஆட்சியாளர்கள் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். […]

இந்தியா செய்தி

சிறையில் அடைக்கப்பட்ட பிரபல இந்திய யூடியூபர்

  • September 19, 2023
  • 0 Comments

பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன் கோவைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கினார். இதில், டிடிஎஃப் வாசனுக்கு கை முறிவு ஏற்பட்டது. பைக் வீலிங் செய்து, விபத்தில் சிக்கிய நிலையில் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், யூ டியூபர் டிடிஎஃப் வாசனை அக்டோபர் 3ம் தேதி வரை சிறையில் வைக்க காஞ்சிபுரம் […]

உலகம் செய்தி

அமெரிக்காவை சென்றடைந்தார் உக்ரேனிய ஜனாதிபதி

  • September 19, 2023
  • 0 Comments

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்காவின் நியூயார்க் வந்தடைந்தார். ரஷ்யப் போரில் உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவைக் கேட்க உக்ரைன் அதிபர் இந்த வாரம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றுவார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் 06 துணை ஜனாதிபதிகள், 04 பிரதிப் பிரதமர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் உட்பட 140 அரச தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு பொதுச்சபை அமர்வில் தங்கள் அரசின் சார்பில் தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்ற […]

உலகம் செய்தி

ஹாங்காங்கில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு சீனாவிடமிருந்து புதிய சட்டம்

  • September 19, 2023
  • 0 Comments

சீனாவின் வெளியுறவு அமைச்சகம் ஹாங்காங்கில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதரகங்களையும் தங்கள் உள்ளூர் ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையில், அதன் அரை தன்னாட்சி நகரமான ஹாங்காங்கில் தனது கட்டுப்பாட்டை கடுமையாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சீனா, ஹாங்காங் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அலுவலகங்களில் உள்ள அனைத்து துணைத் தூதரகங்களுக்கும் அனுப்பப்பட்ட தொடர்புடைய கடிதம், அக்டோபர் 18 ஆம் திகதிக்கு முன்னர் கோரிக்கைக்கு இணங்க வேண்டும் என்று கூறுகிறது. அதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முழு பெயர், பணியின் […]

error: Content is protected !!