இலங்கை

திருகோணமலையில் பதற்ற நிலை : வலுக்கும் கண்டனங்கள்!

  • September 18, 2023
  • 0 Comments

திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை தாங்கி வந்த நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடாத்தியதுடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 14 பேரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 06 சந்தேக  நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 06 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆறு பேரில் இரண்டு பெண்கள் அடங்குவதாகவும்,  அவர்கள் 35ற்கும் 50 வயதுக்கும் […]

இலங்கை

முட்டைகள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்பினால் சட்டநடவடிக்கை!

  • September 18, 2023
  • 0 Comments

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்படும் முட்டைகள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் செயற்கையாக தயாரிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையில் சுமார் நூறு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த முட்டைகள் தொடர்பில் எந்தவொரு முறைப்பாடும் […]

இலங்கை

பகிடிவதை தொடர்பில் புதிய தீர்மானம் : சுரேன் ராகவன்

  • September 18, 2023
  • 0 Comments

பகிடிவதைக்கு எதிரான தேசிய குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 12 மாதங்களில் 36 பகிடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அது தொடர்பில் 57 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தில் மாத்திரம் 12 பகிடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் […]

இலங்கை

இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தல் : கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்!

  • September 18, 2023
  • 0 Comments

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் அமுல்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கும்  பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள்  கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை legis_com@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது செயலாளர், பாராளுமன்ற சிறப்புக் குழு, இலங்கை நாடாளுமன்றம், ஸ்ரீ ஜெயவர்தனபுர, கோட்டே என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவற்காக சபாநாயகரால் 11 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து ஆர்வமுள்ள […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் மீன் உணவால் கை, கால்களை இழந்த தாயார்..!

  • September 18, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் திலாப்பியா மீன் உணவை சாப்பிட்ட தாயார் ஒருவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, தற்போது கை, கால்கள் துண்டிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மிக ஆபத்தான பாக்டீரியாவால் மாசுபட்ட திலாப்பியா மீன் உணவை சாப்பிட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் 40 வயதான லாரா பராஜாஸ். இவரே வியாழக்கிழமை உயிர் காக்கும் அறுவைசிகிச்சைக்கு உள்ளானார். சுமார் ஒரு மாத காலம் சிகிச்சைக்கு பின்னர், மருத்துவர்கள் இந்த முடிவுக்கு வந்திருந்தனர். உள்ளூர் சந்தை ஒன்றில் […]

இலங்கை

இலங்கையில் மின் கட்டணத்தில் திருத்தம் : ஜனவரி முதல் வரவுள்ள மாற்றம்!

  • September 18, 2023
  • 0 Comments

இலங்கை மின்சார சபை மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என பொறியியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் இவ்வருடத்தில் இரு முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெற்று தொடர்ந்து மின்சாரம் வழங்குவதன் மூலம் மின்சார சபை நஷ்டம் அடைவதாகவும் பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும் இந்த […]

ஆசியா

புதிய தொலை உணர்வு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்னுக்கு ஏவிய சீனா..!

  • September 18, 2023
  • 0 Comments

வானில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் யோகன்-39 என்னும் தொலை உணர்வு செயற்கைக்கோளை ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று ஏவியது. இந்த செயற்கைக்கோள் அதிநவீன புவி கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் என்றும், யோகன் 39 லாங் மார்ச்-2D கேரியர் ராக்கெட் மூலம் 12:13 மணிக்கு (பெய்ஜிங் நேரம்) ஏவப்பட்டது மற்றும் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை

ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் எரிசக்தி அமைச்சருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

  • September 18, 2023
  • 0 Comments

இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche திங்கட்கிழமை (செப். 18) காலை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகரவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, அரசின் கொள்கைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள், மின்சாரத் துறை சீர்திருத்தக் கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான நிதி உதவி மற்றும் பசுமை நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தரப்புக்கும் இடையே விவாதிக்கப்பட்டது. மேலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உதவும் பொறிமுறையை […]

ஐரோப்பா

மத்திய இத்தாலியில் மிதமான நிலநடுக்கம்!

  • September 18, 2023
  • 0 Comments

மத்திய இத்தாலியில் 4.8 ரிக்டர் அளவில் மிதமான  நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மத்திய இத்தாலியில் புளோரன்ஸ் நகருக்கு வடக்கே நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளதுடன், ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் இதுவரை எவ்வித உடமைகளுக்கும் உயிர்களுக்கும் சேதம் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இலங்கை

திலீபனின் உருவச்சிலை தாங்கிய ஊர்தி மீது தாக்குதல்: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  • September 18, 2023
  • 0 Comments

திருகோணமலை-சர்தாபுர பகுதியில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை தாங்கிய ஊர்தி மீது தாக்குதல் நடாத்தியதுடன் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 14 பேரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் இன்று (18) குறித்த சந்தேக நபர்களை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை -கொழும்பு வீதியினூடாக வாகனம் ஒன்றில் […]

error: Content is protected !!