விளையாட்டு

செஸ் இறுதிப் போட்டி; தமிழக வீரருக்கு 2ஆம் இடம்

  • August 24, 2023
  • 0 Comments

உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரில் வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன். தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா போராடி தோல்வியுற்று இரண்டாம் இடம் பிடித்தார். உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன், 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரும், சென்னையை சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா விளையாடினார். இரு கிளாசிக்கல் […]

இலங்கை

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை சம்பவம்! சிறைச்சாலையில் பிரதான சந்தேநபரிடம் இருந்து தொலைபேசி மீட்பு

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை பிரதான சந்தேநபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உள்ளடங்களாக 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த நபர்கள் அவ் வீட்டில் இருந்த ஒருவர் மீது வாள் வீசி தாக்கியதுடன், வீட்டிற்கு பெற்றோல் ஊற்றி […]

உலகம்

பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் புதிய இணையவுள்ள 6 நாடுகள்

  • August 24, 2023
  • 0 Comments

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ மாநாடு நேற்று முன்தினம் தென்னாப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் தொடங்கியது. இது 3 நாள் மாநாடு ஆகும். கொரோனா காரணமாக, 3 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி நிகழ்வாக மாநாடு நடக்கிறது. இந்நிலையில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகள் இணைய உள்ளதாக தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அறிவித்துள்ளார். அர்ஜெண்டினா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் ஆகிய […]

இலங்கை

வட்டி விகிதங்கள் தொடர்பில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்படும் – நந்தலால்!

  • August 24, 2023
  • 0 Comments

வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான பொது வட்டி வீதத்தை கொள்கை வட்டி வீதத்துடன் குறைக்கும் வகையில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்படும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கூடிய நாணயச் சபையின் தீர்மானங்களை அறிவிப்பதற்காக இன்று (24.08) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “பாலிசி வட்டி விகிதங்கள் குறைக்கப்படும், பணவியல் பணப்புழக்கம் அதிகரிக்கும் […]

இலங்கை

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் நடவடிக்கைகள் நியாயமற்றது – விதுர விக்ரமநாயக்க

  • August 24, 2023
  • 0 Comments

திருகோணமலை பொரலுகந்த ரஜமஹா விகாரையின் மகாநாயக்கர் அம்பிட்டிய சுகித வன்சதிஸ்ஸ தேரரை விகாரைக்குள் பிரவேசிக்க விடாமல் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் நடவடிக்கை நியாயமற்றது என புத்தசாசன மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துரலியே இரத்தின தேரர் சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தேரரை ஆலயத்திற்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் கிழக்கு மாகாண ஆளுநரின் தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்தார். எவ்வாறாயினும், இவ்விவகாரம் தொடர்பாக இரண்டு நீதிமன்ற வழக்குகள் […]

உலகம்

விமான விபத்துக்கும் உக்ரைனுக்கும் எந்த தொடர்பும் இல்லை! ஜெலென்ஸ்கி

வாக்னர் தளபதி பிரிகோஷினின் மரணத்தில் உக்ரைன் சம்பந்தப்படவில்லை என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். “இந்த சூழ்நிலையில் நாங்கள் ஈடுபடவில்லை, அது நிச்சயம். இதில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும் என்று நான் நினைக்கிறேன்,” என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கிய்வில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். பிர்கோஸின் எம்ப்ரேர் லெகஸி 600 ரக விமானத்தில் மாஸ்கோவில் இருந்து பிர்கோஸின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரை நோக்கிச் வாக்னர் தளபதி பிரிகோஷினின் சென்ற விமான விழுந்தது விபத்துக்குள்ளானது. திடீரென விமான தலை […]

பொழுதுபோக்கு

அவரை நிம்மதியாக வாழ விடுங்கள்; அஜித்துக்கு ஏற்பட்ட நிலை

  • August 24, 2023
  • 0 Comments

அஜித் ஏர்போர்ட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்களின் செயலை நெட்டிசன்கள் பலரும் கண்டித்து, அறிவுரை கூறியுள்ளனர் அஜித் குமார் எப்போதும் போல பாதுகாப்பை தவிர்த்து விமான நிலையத்தை விட்டு தானாகவே வெளியேறினார். இருப்பினும், விமான நிலையத்தில் அஜித்தைக் கண்ட அவரது தீவிர ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அவருடன் போட்டோ எடுக்கவும் கை கொடுக்கவும் முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், அஜித் அசௌகரியத்துடன் தனது […]

இலங்கை செய்தி

டுபாயில் 42 இலங்கை பெண்களுக்கு நேர்ந்த கதி!

துபாயில் வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிந்த 42 பேரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டுபாயில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. துபாயில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளானதன் காரணமாகவே அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முன்னதாக, 10 பேர் கொண்ட குழு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா

ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்ததில் 3 பேர் பலி- ஒருவர் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள டூடு பகுதியில் டிப்பர் வாகனம் சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மற்றொருவர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. புதன்கிழமை இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. ஒரு மூத்த போலீஸ் அதிகாரி இறந்ததை உறுதிப்படுத்தினார், காயமடைந்தவர்களை வாகனத்தில் இருந்து வெளியே எடுக்க மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது.

இலங்கை

இந்தியாவின் வரலாற்று சாதனையால் இலங்கை பெருமிதம் கொள்கிறது! ரணில் விக்கிரமசிங்க

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் வரலாற்று சாதனைக்காக இலங்கை பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் சந்திரயான்-3 நேற்று புதன்கிழமை நிலவின் தென் துருவத்திற்கு அருகில் மெதுவாக தரையிறங்கும் முதல் விண்வெளிப் பயணமாக மாறியது. சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய இந்திய பிரதமர் மோடி, இஸ்ரோ குழுவினர் மற்றும் இந்திய மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார், இது சந்திரனின் […]