75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணம்! விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை
சுமார் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணம் தொடர்பான தகவல்களை வெளியிடத் தவறியதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்கான திகதியை அறிவிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான மேலதிக […]













