எரிபொருள் விற்பனை : ஈரானுக்கு பொது உரிமத்தை வழங்கியது அமெரிக்கா!
ஈரான் எரிபொருள் விற்பனை செய்வதற்கான தடையை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அதன்படி, அறுபது நாட்களுக்கு செல்லுபடியாகும் பொது உரிமத்தை வழங்குக அமெரிக்க கருவூலத் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
“சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு இணங்க, ஹோர்முஸ் ஜலசந்தியில் தடையற்ற மற்றும் வெளிப்படையான போக்குவரத்திற்கும், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆய்வாளர்களைத் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கவும் ஈரான் உறுதியளித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது ஈரானின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது அந்நாடு விற்கக்கூடிய பீப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, அந்த பீப்பாய்களுக்கு அதிக விலை பெறவும் வழிவகுக்கக்கூடும்.




