இந்தியா

காவிரியிலிருந்து அட்டவணைப்படி நீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் அறிவுறுத்தல்!

காவிரியிலிருந்து அட்டவணைப்படி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக- கர்நாடக எல்லையில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட திட்டமிட்டுள்ள கர்நாடகா அதற்கான நிதியை ஒதுக்கி ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அணை கட்ட இடைக்கால தடை விதிக்கப்பட்ட சூழலில் ஒன்றிய அரசின் சுற்றுசூழல் அமைச்சகமும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16 வது கூட்டம் […]

உலகம்

கனவு வந்ததால் தன்னை தானே சுட்ட நபரால் அதிர்ச்சி

அமெரிக்காவில் வீட்டில் திருடுபோவதாக கனவு கண்ட நபர் உறக்கத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட சம்பவம் அதிச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இலியானிஸ் மாகாணத்தின் லேக் பாரிங்டன் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மார்க் டிகாரா. காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நிலையில், இது குறித்து விசாரித்த போது அவர் தெரிவித்த பதில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 62 வயதான இவர் கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது இவருக்கு கனவு வந்துள்ளது. அதில் […]

ஐரோப்பா

இங்கிலாந்தின் அவந்தி வெஸ்ட் கோஸ்ட் ரயில் ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவிப்பு!

  • June 16, 2023
  • 0 Comments

லண்டன், வடமேற்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தை இணைக்கும் அவந்தி வெஸ்ட் கோஸ்ட் ரயில் நெட்வொர்க்கில் உள்ள ரயில் ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். சமீபகாலமாக இங்கிலாந்து முழுவதும் ஊதிய உயர்வு கோரி பல்வேறு வேலை நிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், ஜுனியர் வைத்தியர்கள் மாதத்தில் மூன்றுநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது ரயில் ஓட்டுனர்கள் வரும் ஜுலை மாதம் 2 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கிடையில், லண்டன் நார்த் […]

உலகம்

மீண்டும் தீவிரமடையும் கொரோனா! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற 76வது உலக சுகாதார சபையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன், தற்போதைக்கு பாதிப்புகள் அதிக அளவு இல்லாததால் கொரோனா வைரஸ் அவசரநிலையில் இருந்து மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தொற்று இனி வரும் காலங்களில் தீங்கு விளைவிக்கும் விகாரங்களாக மாறி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் […]

ஐரோப்பா

ஆப்பிரிக்க தலைவர்களின் விஜயத்தின்போது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா!

  • June 16, 2023
  • 0 Comments

கியேவ் மீதான ஏவுகணைத் தாக்குதல், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே அமைதிக்கான  “நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஆப்பிரிக்கத் தலைவர்களின் தூதுக்குழு இன்று (16) கியேவிற்கு பயணம் செய்துள்ளனர்.இதன்போது கீயேவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குல்களை அவர்கள் பார்வையிட்டனர்.   அதேநேரம் அவர்களுடைய விஜயத்தின்போதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அவர்கள் கட்டாய பதுங்கு குழிக்குள்  தங்குமாறு  கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யா அமைதியை விரும்பவில்லை என்ற செய்தியை ஆப்பிரிக்காவிற்கு சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.   […]

இந்தியா

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இருவரும் விசரணைக்கு முன்னிலையாகும் படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் நேரில் முன்னிலையாக சம்மன் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

அமைதியை வேண்டி நிறைய பிரார்த்தனைகள் செய்தேன்: சமந்தா உருக்கம்

பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சமந்தா. சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான யசோதா மற்றும் சாகுந்தலம் கலவையான விமர்சனங்களை பெற்றது.   யசோதா படத்தின் புரொமோஷன் பணிகளில் கலந்து கொண்ட சமந்தா ஒரு நேர்காணலில் தனக்கு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அதன்பின்னர் அதிலிருந்து தான் மீண்டு வருவதாக தெரிவித்து, தீவிரமாக படப்பிடிப்பில் ஈடுப்பட்டார். […]

இலங்கை

G.C.E O/L பரீட்சைதான் மாணவரின் வெற்றியை தீர்மானிக்க வேண்டுமா ?

  • June 16, 2023
  • 0 Comments

ஒரு மாணவரின் வெற்றியை (G.C.E) சாதாரண பரீட்சைதான் தீர்மானிக்க வேண்டுமா என்பது குறித்து   அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அலரி மாளிகையில் இன்று (16)   இடம்பெற்ற ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த விடயம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் கூறினார். இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து 7,342 ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்ததோடு, கொழும்பு மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலைகளுக்கு 1,729 ஆசிரியர்களும், மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 626 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த […]

இலங்கை

விவசாயிகளின் கையில் இனி துப்பாக்கி ? விவசாய அமைச்சர் பணிப்புரை

பயிர்களைப் பாதுகாப்பதற்காக விவசாயிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் சேதமடைவதைத் தடுக்க வெடிமருந்துகளுடன் கூடிய துப்பாக்கிகளை வழங்குமாறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், துப்பாக்கிகளை வழங்குவதற்கு அனுமதிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கடிதம் ஒன்றினூடாக கோரிக்கை விடுக்குமாறு, விவசாய அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். வன விலங்குகளால் பயிர்களுக்கு பாரிய சேதம் […]

இலங்கை

வாகன இறக்குமதியை அனுமதிக்க முடியாது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

  • June 16, 2023
  • 0 Comments

தற்போதுள்ள பொருளாதார நிலைமைகளின் கீழ் வாகன இறக்குமதியை அனுமதிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமையை கவனமாக ஆராய்ந்த பிறகே வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கான காரணங்களை விளக்கிய சியம்பலாபிட்டிய, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) சுமார் 75-80 மில்லியன் அமெரிக்க டொலர்களை சந்தையிலிருந்தும், மத்திய வங்கியிடமிருந்தும் எரிபொருள் கொள்வனவு செய்ததாலும், முதலீடு செய்யும் […]