ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு

  • May 17, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் திறமையான புலம்பெயர்ந்தோரை அழைத்து வருவதற்கான பிரச்சாரத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக மெல்பேர்னில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அடையாளம் காணப்பட்ட தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான பற்றாக்குறையை நிரப்புவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) அறிக்கையின்படி, ஆர்வமுள்ள இலங்கையர்கள் குறிப்பிட்ட இணையத்தளத்திற்குச் சென்று பொருத்தமான வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அந்தந்த பணிகளுக்கு இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பிக்கலாம்; https://www.smartmoveaustralia.gov.au

வாழ்வியல்

கண்களைச் சுற்றிக் கருவளையம் – காரணத்தை கண்டுபிடித்த மருத்துவர்

  • May 17, 2023
  • 0 Comments

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட எதிர்நோக்கும் சருமப் பிரச்சினைகளில் ஒன்றாக கண்களைச் சுற்றிய கருவளையம் ஏற்பட்டுள்ளது. தூக்கமின்மையால்தான் கருவளையம் ஏற்படுகிறது என்பது பரவலான கருத்தாகும். ஆனால், அது முற்றிலும் உண்மையில்லை என சிங்கப்பூர் மகளிர், குழந்தை மருத்துவமனையில் பணிபுரியும் தோல் மருத்துவர் உமா அழகப்பன் தெரிவித்துள்ளார். கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படப் பல காரணங்கள் உண்டு என மருத்துவர் அழகப்பன் கூறினார். அவற்றில் சில… கண்களுக்குக் கீழ் உள்ள பகுதி மெல்லியதாகவும் அதிகமான ஒளி கசியும் தன்மையும் […]

இலங்கை

இலங்கையில் அச்சுறுத்தும் பாதிப்பு – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • May 17, 2023
  • 0 Comments

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலையால், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் 412 டெங்கு நோயாளர்கள் நேற்று முன்தினம் பதிவானதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு காய்ச்சலினால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு 19 ஆவது வார நிறைவில், 1294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இந்த வருடத்தின் 19ஆவது […]

ஐரோப்பா

நான் தான் பிரித்தானிய பிரதமரின் மாமியார் – லண்டன் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சுதா மூர்த்தி

  • May 17, 2023
  • 0 Comments

பிரித்தானிய பிரதமரது மாமியார் தான் என்பதனை யாருமே நம்புகிறார்கள் இல்லை என எழுத்தாளரும் தொழிலதிபருமான சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை இந்திய நகைச்சுவை நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சுதா மூர்த்தி வெளிப்படுத்தியுள்ளார். ஒரு முறை லண்டனுக்கு சென்ற போது விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு பிரிவில் ஒரு மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டதாக சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார். “குடிவரவு அதிகாரி எனது விலாசத்தை கூறுமாறு கூறிய போது, நான் டவுணிங் வீதி முகவரியையே […]

ஆசியா

சிங்கப்பூரில் விபத்தில் சிக்கிய வெளிநாட்டு ஊழியர்கள் – நெகிழ வைத்த மருத்துவர்

  • May 17, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் விபத்தில் சிக்கிய இரு வெளிநாட்டு ஊழியர்களுக்கு விடுமுறையில் இருந்த சிங்கப்பூர் துணை மருத்துவர் ஒருவர் முதலுதவி சிகிச்சை அளித்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோகூர் பாருவில் விடுமுறைக்கு சென்றிருந்த அவர், விபத்தில் காயமடைந்த இரண்டு மலேசிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு முதலுதவி அளித்துள்ளார். விபத்து நடந்த இடத்தை கடந்து சென்ற அவர், விரைந்து சென்று உதவி வழங்கியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த மே 8 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் […]

இலங்கை

இலங்கையில் மின் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • May 17, 2023
  • 0 Comments

இலங்கையில் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மேற்கொள்ளப்படும் மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபை தயாரித்துள்ள மின் கட்டண யோசனைத் திட்டம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானங்களையும் மின் கட்டணத் திருத்த யோசனைகளை முன்வைக்க வேண்டிய வழிமுறைகளையும் கருத்திற் கொண்டு வருடாந்தம் இரண்டு தடவைகள் மின் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதலாம் திகதியும் ஜூன் மாதம் முதலாம் திகதியும் இந்த மின் கட்டணத் திருத்தம் […]

ஆசியா

சீனாவை உலுக்கும் வெப்பம் – புதிய உச்சத்தை எட்டிய காலநிலை

  • May 17, 2023
  • 0 Comments

சீனாவில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட வெப்பத்தால் மக்கள் கடும் நெருக்கடி நிலையில் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆசியாவின் பல பகுதிகளிலும் மக்கள் கோடை வெப்பத்தால் கடுமையாக அவதிப்படுகின்றனர். அதற்கமைய, சீனாவில் நாடு முழுதும் வெப்ப நிலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. Shandong மாநிலத்திலும் பெயச்சிங்கிலும் அனல் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பெய்ச்சிங்கில் வெப்பம் 36 டிகிரி செல்சியஸைத் தொடக்கூடும். Jinan, Tianjin, Zhenzhou முதலிய வட்டாரங்களிலும் அதே நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பத்தைச் சமாளிக்க […]

ஐரோப்பா

பிரான்ஸில் இருவரை கொலை செய்த நபர் எடுத்த விபரீத முடிவு

  • May 17, 2023
  • 0 Comments

பிரான்ஸில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மூவர் கொல்லப்பட்டுள்ளனர். பிரான்ஸின் தெற்கு மாவட்டமான Gard இல் உள்ள Saint-Dionisy எனும் சிறு கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சனிக்கிழமை நண்பகல் வேளையில், அங்குள்ள வீடொன்றுக்குச் சென்ற 51 வயதுடைய ஒருவர், அங்கு வசித்த இருவரை சுட்டுக்கொன்றுள்ளார். ரைஃபிள் வகை துப்பாக்கியால் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் இருவரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக அறிய முடிகிறது. துப்பாக்கிதாரியின் முன்னாள் காதலி ( வயது 27 ) மற்றும் அப்பெண்ணின் புதிய காதலன் ( வயது […]

ஐரோப்பா

ஜெர்மனியில் கொடுப்பனவில் மாற்றம் – வெளியான முக்கிய தகவல்

  • May 17, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. ஜெர்மனியில் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வநதுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஆடி மாதத்தில் இருந்து புதிய நடைமுறை மூலமாக இதற்கு விண்ணப்பம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜெர்மனியின் தொழில் மந்திரி வுபேட்டஸ் கயில் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார். ஜெர்மனியில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வந்த காலங்களில் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தது. அதனால் பல மக்கள் தங்களது வேலை […]

இலங்கை

புலம்பெயர் இலங்கையர்களுக்காக அறிமுகமாகும் திட்டம்!

  • May 17, 2023
  • 0 Comments

புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் தேவைக்கு ஏற்ப நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிராமிய தனிநபர் வீட்டுத் தொகுதிகளாக இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான […]