செய்தி விளையாட்டு

இங்கிலாந்து அணிக்கு 180 ஓட்டங்கள் இலக்கு

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 19 பந்தில் அரை சதமடித்தார். அவர் 23 பந்தில் 59 ரன் எடுத்து அவுட்டானார்.

முதல் விக்கெட்டுக்கு மேத்யூ ஷாட்-ஹெட் ஜோடி 86 ரன்களை சேர்த்தது. ஷாட் 41 ரன்னில் ஆட்டமிழ்ந்தார்.

கேப்டன் மிட்செல் மார்ஷ் ஒரு ரன்னிலும், ஸ்டோய்னிஸ் 10 ரன்னிலும் வெளியேறினர். டிம் டேவிட் டக் அவுட்டானார். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், ஆஸ்திரேலியா அணி 19.3 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன் 3 விக்கெட்டும், சாகிப் மஹ்மூத், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content