ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ள 15,000 நியூசிலாந்து நாட்டவர்கள்

நியூசிலாந்து நாட்டினருக்கு குடியுரிமை வழங்கும் விரைவுத் திட்டத்தின் கீழ் 06 வாரங்களுக்குள் 15,000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த புதிய முறை ஜூலை 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் படி நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 375 பேர் விண்ணப்பங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த விண்ணப்பங்களில் சுமார் 35 சதவீதம் குயின்ஸ்லாந்திலிருந்தும், 30 சதவீதம் விக்டோரியாவிலிருந்தும், 20 சதவீதம் நியூ சவுத் வேல்ஸிலிருந்தும் வந்தன.

இவர்களில் ஏறக்குறைய 500 பேர் ஏற்கனவே குடியுரிமை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் மற்றும் எதிர்காலத்தில் ஒரு விழாவில் குடியுரிமை வழங்கப்படுவார்கள்.

விசேட வீசா பிரிவின் கீழ் அவுஸ்திரேலியாவில் குறைந்தபட்சம் 04 வருடங்கள் தங்கியிருக்கும் நியூசிலாந்து நாட்டவர்களுக்கு நிரந்தர வதிவிடமின்றி குடியுரிமை வழங்கப்படுகிறது.

விசேட வீசா பிரிவின் கீழ் தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ள சுமார் 350,000 நியூசிலாந்து நாட்டவர்கள் நிரந்தர வதிவிட உரிமை பெறாமல் நேரடியாக குடியுரிமை பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித