செய்தி தமிழ்நாடு

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய சொந்த பெரியப்பா கைது

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு 16.11.2018 ஆம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது தான் அவர் எட்டு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரணை செய்ததில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியின் தாத்தா முறை கொண்ட நாகன் வயது 69 என்பவரும் சொந்த பெரியப்பா ரங்கன் வயது 67 என்பவரும் சேர்ந்து சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்தது,

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நாகன் மற்றும் ரங்கன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததுவிசாரணையில் காவல்துறையினர் செய்த டி என் எ சோதனையில் சிறுமியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பெரியப்பா ரங்கன் காரணம் என்பது தெரிய வந்தது

இன்று இந்த வழக்கில் மகிலா நீதிமன்ற நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார்

அவர் அளித்த தீர்ப்பில்புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கடந்த 2018 ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய சொந்த பெரியப்பா ரங்கன் வயது 67 என்பவருக்கு

ஆயுள் தண்டனை இரண்டு வருட கடும் காவல் சிறை தண்டனை 3 லட்சம் ரூபாய்  அபராதமும்

இதேபோல்  சிறுமையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் தாத்தா முறை கொண்ட நாகன் வயது 69 என்பவருக்கும்   ஆயுள் தண்டனை 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்  அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

 

(Visited 1 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content