செய்தி தமிழ்நாடு

ஸ்டீராய்டு ஊசி செலுத்தி உடற்பயிற்சி ஆசிரியர் உயிர் இழப்பு

ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் அன்பழகன் இவரது மகன் சபரி முத்து என்கின்ற ஆகாஷ் /25.

நடுகுத்தகையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் (gym trainer ) பணியாற்றி வந்தார்.25 வயதான ஆகாஷ் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்ட வெற்றிப்பெற்றுள்ளார்.

இதனால் மாநில அளவிலான போட்டியில் பங்குபெற்று வெற்றிப் பெற வேண்டும் என கடுமையாக பயிற்சி செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார்.

பின்னர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு கிட்னியும் செயல் இழந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து  தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த  சபரி முத்து சிகிச்சைப் பலனின்றி உயிர் இழந்தார்.26 ஆம் தேதி நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற

சபரி முத்து கடுமையாக உடற்பயிற்சி செய்ததுடன் கட்டுடல் கொண்டு வர சீராய்டு ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது.இதனால் இரண்டு கிட்னியும் செயல் இழந்து சபரி முத்து உயிர் இழந்து இருப்பதாக கூறப்படுகிறது.

(Visited 2 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content