ஆசியா

மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட சர்வாதிகாரியின் பேரன் – கட்டியணைத்த பொதுமக்கள்

தென் கொரியாவின் கடைசி சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வான் 1980ம் ஆண்டு நடத்திய ராணுவ அத்துமீறலுக்கு அவரது பேரன் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

1980 ஆண்டு ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தென் கொரியாவில் கூடத் தொடங்கினர்.அத்துடன் சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வான் இராணுவ ஆட்சியை எதிர்த்து மக்கள் பெரும் போராட்டத்திலும் குதிக்க தொடங்கினர்.அந்த வகையில் 1980ம் ஆண்டு குவாங்ஜு நகரில் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை கலைக்க சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வான் மிகப்பெரிய ராணுவ தாக்குதலை முன்னெடுத்தார், இதில் 200 பேர் வரை கொல்லப்பட்டதுடன், பலர் சித்திரவதை செய்யப்பட்டனர் மற்றும் பலர் காணாமல் போனார்கள்.இது தென் கொரியாவின் வரலாற்றில் மிகவும் அழியாத வடுவாக இருக்கும் நிலையில், இதுவரை சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வான் தரப்பில் இருந்து எந்தவொரு மன்னிப்பும் கோரப்படாமல் இருந்தது.

தென்

இந்நிலையில் 1980ம் ஆண்டு சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வான் நடத்தப்பட்ட இராணுவ அத்துமீறலுக்கு அவரது பேரன் சுன் வூ-வொன பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.கடந்த வெள்ளி கிழமை அவருடைய தாத்தா சுன் டூ-ஹ்வான் அவர்களின் இராணுவ ஆட்சியை எதிர்த்து போராடியவர்களின் தைரியத்தை சுன் வூ-வொன்(27) பாராட்டி இருந்தார்.அத்துடன் தனது தாத்தா நடத்தியது மிகப்பெரிய குற்றம் என்றும் “இதற்காக முன்னபே மன்னிப்பு கேட்காததற்காக வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் சுன் வூ-வொன் நகரின் தேசிய கல்லறைக்கு வந்து உயிர் பிரிந்தவர்களுக்கு மரியாதையும் செலுத்தினார்.

K-netizens

சுன் வூ வொன்-னின் மன்னிப்பை சில பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் வரவேற்றுள்ளது, அத்துடன் நகரின் தேசிய கல்லறையில் ஒருவர் சுன் வூ-வொனை கட்டித் தழுவி ஆறுதல் தெரிவித்தார்.1988ம் ஆண்டு சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வான் ஆட்சி காலம் முடிவுக்கு வந்தது, பின் பல்வேறு மோசடி மற்றும் ஊழல் குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.இறுதியில் 2021ம் ஆண்டு தனது 90 வயதில் சுன் டூ-ஹ்வான் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content