ஐரோப்பா

பிரான்ஸில் நடுவீதியில் பிரசவிக்கப்பட்ட குழந்தைக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் பெண் ஒருவர் நடு வீதியில் வைத்து குழந்தை ஒன்றை பெற்றெடுத்த நிலையில், அக்குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளத.

வியாழக்கிழமை காலை இச்சம்பவம் Nanterre நகரில் இடம்பெற்றுள்ளது.

Avenue de la Commune-de-Paris வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த இளம் பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி எடுத்துள்ளது. வலியில் துடித்த குறித்த பெண் வீதியில் விழுந்து கிடந்துள்ளதுடன், தீயணைப்பு படையினருக்கு அழைப்பு எடுத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வருகை தந்த போது, குறித்த பெண் குந்தை ஒன்றை ஈன்றெடுத்துள்ளார்.

காற்சட்டைக்குள் சிக்கியிருந்த குறித்த குழந்தை உயிரிழந்த நிலையில் தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர்.

குறித்த பெண் கர்ப்பமாக உள்ளதை அறிந்திருக்கவில்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

குறித்த பெண் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content