செய்தி தமிழ்நாடு

படகு போட்டியின் இறுதி சுற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய கோவளத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை தொடர்ந்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா சுந்தர் ஏற்பாட்டில் மாபெரும் படகு போட்டி

மற்றும் 5000 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் துறை அமைச்சரும், காஞ்சி வடக்கு மாவட்ட செயலருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இறுதி சுற்று படகு போட்டியினை கொடியசைத்து  துவக்கி வைத்ததுடன் போட்டியை  நேரில் பார்த்தார்,  போட்டியில் கானத்தூர் ரெட்டிகுப்பம் அணியினர் முதலிடத்தையும்,

கோவளம் மீனவ குப்பம் அணியினர் இரண்டாவது இடத்தையும், செம்மஞ்சேரி குப்பம் அணியினர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர் முதல் பரிசாக ஒரு பைபர் படகும் அந்த படகில் சென்ற 4 வீரர்களுக்கும் தலா 1 சவரன் தங்க சங்கிலியும், இரண்டாம் இடத்தை பிடித்தவர்களுக்கு

படகுக்கு பயன்படுத்தும் எஞ்சினும், மூன்றாம் இடத்தை பிடித்தவர்களுக்கு சிறிய படகும் பரிசாக வழங்கப்பட்டது  அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரை ஆற்றிய விளையாட்டு துறை அமைச்சர்

மக்கள் நலனில் என்றும் அக்கறையுடன் செயல்படுவது தமிழக அரசு என பேசினார், நிகழ்ச்சியில்  திமுக கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஒன்றிய சேர்மன் எஸ் ஆர் எல் இதயவர்மன் ,

பேரூராட்சி மன்ற தலைவர் தேவராஜ் தலைமை பொது குழு உறுப்பினர்கள் மாநில மாவட்ட அணி பொறுப்பாளர்கள், மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக  நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்..

 

(Visited 1 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content