Breaking News செய்தி

பசில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

சுற்றுலா பணியக நிதி முறைகேடு வழக்கில் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் எஸ்சிஓ செய்திப் படம்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறை சட்டவிரோதச் சொத்துக்கள் பிரிவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா மேம்பாட்டுப் பணியக நிதி முறைகேடு வழக்கில், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

hqxd1

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி