தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்
கொழும்பு – தெஹிவளையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தெஹிவளை பொதுமயானத்திற்கு அருகில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





