ஆஸ்திரேலியா

டார்லிங் ஆற்றில் செத்து மிதந்த ஒரு மில்லியன் கணக்கான மீன்கள் இறப்பு! வெளியாகியுள்ள வீடியோ

அவுஸ்திரேலியா நாட்டின் மெனிண்டீயிலுள்ள டார்லிங் ஆற்றில் கொத்து கொத்தாக மீன்கள் இறந்து மிதந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அவுஸ்திரேலியா நாட்டிலுள்ள மெனிண்டீ நகரத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசிக்கிறது. பிரோக்கன் ஹில் என்ற பகுதியிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் மெனிண்டீ நகரம் அமைந்துள்ளது.இந்நகரிலுள்ள டார்லிங் ஆற்றில் கடந்த 2019 ஆம் ஆண்டில், ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்ததற்கு பாசிப்பூக்கள் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் அவுஸ்திரேலிய நாட்டில் பாரிய அளவில் மீன்கள் உயிரிழந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

தற்போது டார்லிங் ஆற்றில் ஒரு மில்லியன் மீன்கள், முக்கியமாக போனி ஹெர்ரிங் வகை மீன்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன,  அத்துடன் முர்ரே காட், கோல்டன் பெர்ச், சில்வர் பெர்த் மற்றும் சிறிய எண்ணிக்கையிலான பிற  பாரிய வகை மீன் வகைகளும் உயிரிழந்துள்ளன.மேற்கு அவுஸ்திரேலியா முழுவதும் நிலவு வரும் கடுமையான வெப்ப அலை உண்டாகியுள்ளது. இதனால்  நீரின் வெப்ப நிலை அதிகரிப்பதால் மீன்களுக்கு தேவையான ஆக்ஸிசன் கிடைக்காததால் நிறைய மீன்கள் உயிரிழந்து உள்ளது என்று DPI செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

டார்லிங்

மீன்களுக்கு பொதுவாக அதிகப்படியான ஆக்ஸிசன்கள் தேவைப்படுகிறது. ஆனால் புவி வெப்பம் அதிகரிக்கும் போது நீர் குளிர்ந்த தன்மையை இழக்கிறது. இதனால் மீன்கள் ஆக்ஸிசன் பற்றாக்குறையால் இறந்திருக்கின்றன என தெரிய வந்துள்ளது.  இந்த நிலையில் டார்லிங் ஆற்றில் மில்லியன் கணக்கில் மீன்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டார்லிங் ஆற்றில் கொத்து கொத்தாக மீன்கள் இறந்து மிதப்பதை அப்பகுதியை சேர்ந்த நபர் வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content