ஆசியா

சிங்கப்பூரில் புதிய திருத்த சட்டம்: ஜனவரி முதல் அமுல் – மீறினால் நடவடிக்கை

சிங்கப்பூரில் இணையம் அல்லது தொலைத்தொடர்பு சேவைகள் மூலம் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விநியோகம் செய்வது குற்றமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் இந்த சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. அதாவது Shopee மற்றும் GrabFood போன்ற மின்னணு வணிக தளங்கள், பொதுமக்கள், வர்த்தகங்கள் உட்பட இணையம் அல்லது தொலைத்தொடர்பு சேவை வழியாக இனி மதுபானம் விநியோகம் செய்ய உரிமம் தேவை.

தொலைத்தொடர்பு சேவைகள் எதை குறிக்கிறது என்றால்; தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற இணைய அடிப்படையிலான செய்தி அனுப்பும் சேவைகளை அது குறிக்கின்றது.

விநியோகம் செய்வோர் மற்றும் மின்னணு வணிக தளங்கள், மது வாங்கும் நபர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் 18 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தால் மதுபானம் வாங்குவது சட்டப்படி குற்றமாகும் என்று அவர்களுக்கு எச்சரிக்கை செய்யவேண்டும்.

மேலும், அவ்வாறு செய்வதால் என்ன தண்டனையை சந்திரிக்க நேரிடும் என்பதையும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். விதிகளை மீறும் குற்றவாளிகளுக்கு S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். இந்த சட்டம் விநியோகம் செய்வோருக்கும் பொருந்தும்.

உள்துறை அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் காவல்துறை ஆகியவை ஒழுங்குமுறைத் தேவைகளை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து, மது கட்டுப்பாடு (வழங்கல் மற்றும் நுகர்வு) (மதுபான உரிமம்) விதிமுறைகள் 2015 இல் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Bricks-and-mortar கடைகளில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content