செய்தி தமிழ்நாடு

சார்பதிவாளரும் இடைத்தரகரும் கைது

சென்னை குரோம்பேட்டையில் பல்லாவரம் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பல்லாவரம் சார் பதிவாளர் செந்தில் குமார், பதிவு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஜாய் தயாள் தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சார் பதிவாளர்(பொறுப்பு) செந்தில் குமார் 2000 ரூபாய் லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக சிக்கினார்.

அவருக்கு வழக்கமாக பணம் வாங்கி தரும் இடைத்தரகர் சிவா என்பவரும் கைது செய்யப்பட்டார். இராசயணம் தடவிய லஞ்சப்  பணத்தை பெற்ற சார் பதிவாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.

(Visited 1 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content