இலங்கை செய்தி

கிளிநொச்சியில் காதல் மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்

கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரித்தாஸ் குடியிருப்பு பகுதியில் 5 மாதம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இச் சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது காயமடைந்த கர்ப்பிணி உடனடியாக அக்கராயன்குளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், கர்பிணிப் பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர். பெண்ணின் கணவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும், இதனால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதன்காரணமாகவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content