இலங்கை செய்தி

காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர் மரணம்

காலிமுகத்திடல் போராட்டத்தில் முன்னணி செயற்பாட்டாளராக பணியாற்றிய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்திற்கான காரணம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

புத்தி பிரபோத கருணாரத்ன என்ற இந்த இளைஞன் லண்டன் பல்கலைக்கழகத்தின் சட்டப் பட்டதாரி ஆவார்.

நாளிதழ் ஊடகவியலாளர் மற்றும் வலைப்பதிவு எழுத்தாளரான இவர் காலிமுகத்திடல் போராட்டப் பிரதேசத்தில் முதலாவது கூடாரத்தை நிர்மாணித்தவர் எனவும் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவரின் சடலம் இன்று (19) மஹரகம கொதிகமுவவில் தகனம் செய்யப்பட்டது. மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

(Visited 2 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content