ஐரோப்பா செய்தி

கலங்கரை விளக்கத்தில் மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் – வைரல் புகைப்படம்

கலங்கரை விளக்கத்தில் மோதிய கடல் அலையில் மனித முகம் போன்று தோன்றிய நிலையில் அதை ஒரு புகைப்பட கலைஞர் தனது கேமராவில் புகைப்படமாக எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் இயன் ஸ்பரொட் (41). இவர் கொரோனா ஊரங்கு காலத்தில் ஏற்பட்ட மன அழுத்ததில் இருந்து வெளிவர புகைப்பட கலைஞராக மாறினார். பல்வேறு இடங்களுக்கு சென்று இயற்கை நிகழ்வுகளை புகப்படங்களாக எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில், இயன் ஸ்பரொட் கடந்த சில நாட்களுக்கு முன் இங்கிலாந்தின் சதர்லாந்து பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றார். அங்கு பல்வேறு புகைப்படங்களை எடுத்தார். மொத்தம் 12 மணி நேரம் அப்பகுதியில் புகைப்படம் எடுத்துள்ளார். தான் எடுத்த புகைப்படங்களை பார்த்தபோது இயனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

இயன் எடுத்த புகைப்படங்களில் ஒன்றில் கடல் அலை கலங்கரை விளக்கத்தில் மோதி அது மனித முகம் போன்ற உருவத்தில் பொங்கி எழுந்திப்பதை கண்டு இயன் அதிர்ச்சியடைந்தார். கலங்கரை விளக்கத்தில் கடல் அலை மோதி மனித முகம் போன்ற அமைப்பில் கடல் அலை சிதறியதை இயன் தனது கேமராவில் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை இயன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content