இலங்கை செய்தி

இலங்கையில் 13 வயது சிறுமியுடன் காட்டுக்குள் வாழ்ந்த நபருக்கு நேர்ந்த கதி

புத்தளம் வீரபுர பிரதேசத்தில் காட்டுக்குள் 13 வயதான சிறுமியுடன் இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதான நபரையே தாம் கைது செய்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபரையும் பாடசாலை மாணவியான 13 வயது சிறுமியையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை சீருடையுடன் சிறுமி, ஆண்ணொருவருடன் காட்டுக்குள் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் கிரிபாவ-சோலேவெவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சிறுமி ராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றல் 7 ஆம் வகுப்பில் கல்வி கற்று வருபவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபருக்கும் பாடசாலை மாணவிக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்து வந்துள்ளதுடன் பாடசாலை முடிந்த பின்னர், சிறுமி சந்தேக நபருடன் காட்டுக்குள் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாடசாலை மாணவியை மருத்துவப்பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் நேற்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content