செய்தி தமிழ்நாடு

இந்திரா பட்டி ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது

இந்திராபட்டி ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகேயுள்ள இருந்திராபட்டி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை  முன்னிட்டு வருடம் தோறும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி   இன்று காலை 9 மணிக்கு தொடங்கி  நடைபெற்று வருகிறது

. 700 காளைகள் களம் காண உள்ள இப்போட்டியில் 300 மாடுபிடி வீரர்கள் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு காளைகளை அடக்கி வருகின்றனர் இதுவரை 150 மாடுகள் அவிழ்க்கப்பட்டுள்ள இப்போட்டியில் 6 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.

போட்டியை மாநில கூட்டுறவு வங்கி தலைவர் சின்னத்தம்பி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி கொடி அசைத்து துவக்கி வைத்தனர்

இதில் கோயில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் தொடர்ந்து திருச்சி திண்டுக்கல் கரூர் தேனி மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் கால்நடை துறையின் பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வாடிவாசலில்  அவிழ்த்து விடப்படுகிறது

போட்டியில் சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பணம் முடிப்பு,பீரோ.பிரிட்ஜ்,டிரஸ்சிங் டேபில், சில்வர் பாத்திரம், பிளாஸ்டிக் சேர் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில்

இருந்து வந்த ஆயிரக்கணக்காணவர்கள் திரண்டு நின்று கண்டு களித்து வருகின்றனர் மாவட்ட மருத்துவ துறை சார்பில் ஜல்லிக்கட்டு திடல் அருகே தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு காயம் அடைபவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.விபத்து ஏதும் ஏற்பட்டால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

பாதுகாப்பு பணியில்  2 டிஎஸ்பி தலைமையில் 128 க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

 

(Visited 6 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content