செய்தி தமிழ்நாடு

அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்து 20 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையிலிருந்து கீரனூர் நோக்கி கே 6 என்ற அரசு நகர பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது.

அப்போது அந்த பேருந்து கீரனூர் அடுத்த ஒடுக்கம்பட்டி அருகே மங்கதேவன்பட்டி என்ற இடத்தில் சென்றபோது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்திலிருந்த நின்ற மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து பேருந்து மோதியதால் மரம் வேரோடு சாய்ந்தது. இந்நிலையில் பேருந்து மரத்தின் மோதிய விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக காயமடைந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கீரனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற  கீரனூர் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற அரசு பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

(Visited 1 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content