இலங்கை செய்தி

அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்திற்கு 5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு!

அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 50 அரச மருந்தக நிலையகங்களின்  26 இல் தேவையற்ற செலவுகள் அடங்கலாக பல்வேறு காரணங்களால் 5 கோடியே 32 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் குறிப்பிடுகின்றது.

தேசிய கணக்காய்வு அலுவலகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அறிக்கையின் படி, இரத்தினபுரி,  ஸ்ரீ ஜயவர்தனபுர,  பண்டாரகம மற்றும் மொனராகலை ஆகிய நான்கு  அரச மருந்தகங்களில்  2020 ஆம் ஆண்டு  இலாபம் ஈட்டி இருந்த நிலையில்,  2021ஆம் ஆண்டில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து  தேசிய கணக்காய்வு அலுவலகம் அரச மருந்தக கூட்டுத்தாபன நிர்வாகத்திடம் வினவியிருந்தபோது  கொரோனா அச்சுறுத்தல் நிலவிய காலத்தில்  மருத்துவப் பொருட்கள் சேதம் மற்றும் காலாவதியானதே இழப்புக்கு முக்கியக் காரணம் என விளக்கமளித்துள்ளது.

 

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content