ஐரோப்பா

பிரான்ஸின் 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

பிரான்ஸின் காட்டுத் தீ பரவ ஆரம்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஐந்து மாவட்டங்களுக்கு காட்டுத் தீ பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் காட்டுத் தீயினை கணிக்கும் கருவி அமைக்கப்பட்டதன் பின்னர் முதன் முறையாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Meuse, Moselle, Meurthe-et-Moselle ஆகிய மூன்று கிழக்கு மாவட்டங்களிலும், பரிஸ் மற்றும் Hauts-de-Seine ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த ஐந்து மாவட்டங்களுக்கும் ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக Météo France அறிவித்துள்ளது.

ஜூன் மாத ஆரம்பத்தில் இந்த காட்டுத் தீயினை கணிக்கும் கருவி அமைக்கப்பட்டதன் பின்னர், முதன்முறையாக தற்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கருவி வரும் செப்டம்பர் மாதம் வரை செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்