முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

கனடாவில் இலங்கை குடும்பத்திற்கு நடந்தது என்ன? வெளியானது முழுமையான தகவல்

கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவன் இல் இலங்கை குடும்பம் ஒன்று வாழ்ந்த வீட்டில் 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை கனடா நேரப்படி இரவு 11 மணிக்கு சற்று முன்னர் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது.

சம்பவத்தின் போது 35 வயதுடைய தாய், அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் அவர்களுடன் வசித்த மேலும் இரு இலங்கையர்களும் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது குழந்தைகளின் தந்தையான 38 வயதுடைய தனுஷ்க விக்கிரமசிங்க வீட்டுக்கு வந்தபோது, ​​வீட்டில் விளக்குகள் வழமைபோல் எரியவில்லை.

அவர் வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே யாரோ அவரைத் தாக்கியதால், இருள் சூழ்ந்திருந்ததால், அப்போது தாக்கிய நபரை அடையாளம் காண முடியவில்லை.

எவ்வாறாயினும், தம்மைத் தாக்கிய இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா என அடையாளம் கண்ட தனுஷ்க, அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து கேட்டுள்ளார்.

சிறிது நேரம் கழித்துதான் தனுஷ்கவின் கைகள் இரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதையும் உணர்ந்தார்.

அப்போது, ​​தனுஷ்க ஃபேப்ரியோவின் கையில் இருந்த கத்தியை பறித்துக் கொண்டு, தனக்கு உதவுமாறு கூச்சலிட்டவாறு வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

911 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு இரவு 10:52 மணிக்கு அவசர நிலை குறித்து அழைப்பொன்று வந்ததாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.

அழைப்பினை ஏற்படுத்திய நபர் 911 என்ற இலக்கத்திற்கு அழைத்து உதவி கோருமாறு கத்தியபடி உள்ளதாக தெரிவித்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயார் இந்நாட்டின் பொல்கஹவெல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரியவந்துள்ளது.

35 வயதான தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்கவின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

“ஏதோ நடக்கப் போகிறது என்று உணர்ந்தேன். சவப்பெட்டிகளை கனவில் பார்த்தேன். ஏதாவது பெரிய பிரச்சனையாக இருக்குமோ என நினைத்தேன். பௌத்தத்தை தீவிரமாக கடைப்பிடித்தார். விகாரை விகாரையாக சென்ற பிள்ளைதானே….” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 25 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content