இலங்கை செய்தி

தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கும்வரை நமது ஒற்றுமையை காட்டவேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்

தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் வரையில் வடகிழக்கில் உள்ள தமிழர்கள் தமது ஒற்றுமையினை காட்டவேண்டும்.

அதற்காகவே தியாகதீபம் திலீபன் போன்றவர்கள் தியாகங்களை செய்துள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தியாக தீபம் திலீபனின் 36வது ஆண்டு நினைவுதினம் இன்று மட்டக்களப்பில் உணர்வுபூர்வமான அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனால் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் கலந்துகொண்டவர்களும் ஈகச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினார்கள்.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன்,தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணி தலைவர் திவாகரன் மற்றும் முன்னாள் தவிசாளர்கள்,பிரதேசசபை உறுப்பினர்கள்,கட்சி உறுப்பினர்கள்,வலிப முன்னணி உறுப்பினாகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,
2010ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு இக்கட்டான சூழ்நிலையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை தமிழரசுக்கட்சி இந்த நிகழ்வினை செய்துவருகின்றது.

திலீபன் அவர்கள் மருத்துவ பீட மாணவனாகயிருந்து தமிழர்களின் விடுதலைக்காக தமிழீழ விடுதலை புலிகளுடன் இணைந்துகொண்டார்.21வயதில் இயக்கத்தில் இணைந்த அவரின் திறமையினைக்கண்ட தலைவர் அவரை யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக நியமித்தார்.

1987ஆம் ஆண்டு அமைதிப்படையென்ற தோரணையில் இந்திய இராணுவம் கால்பதித்த நிலையில் பல அநியாயங்களை செய்தபோது அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று தோல்வியடைந்த நிலையில் அகிம்சை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தியாவானது அகிம்சையால் விடுதலைபெற்ற நாடு,காந்திய அகிம்சைபேசும் நாடு என்ற அடிப்படையில் அகிம்சை போராட்டம் நடைபெறும்போது அதற்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே திலீபன் அவர்கள் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.

ஆனால் இந்திய அந்த அகிம்சை போராட்டத்தினை ஏற்றுக்கொள்ளாத நிலையில் சரியாக 12வது நாளில் திலீபன் அவர்கள் உயிர்நீர்த்தார்.

உலக வரலாற்றில் 23வயது இளைஞன் ஒருவர் உண்ணாவிரத போராட்டம் நடாத்தி உயிர்நீத்த சம்பவம் ஈழத்திலேயே இடம்பெற்றுள்ளது.

அதேபோன்றுதான் இந்திய படைக்கு எதிராக 1989ஆம் ஆண்டு 54வயதுடைய தாய் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்ததும் வரலாறாகும்.இந்த இரண்டும் இந்திய இராணுவம் இங்கு கால்பதித்தமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது.

13வது அரசியலமைப்பு தொடர்பாக நாங்கள் இன்று பேசிக்கொண்டிருக்கின்றோம்.36வருடங்களுக்கு பின்னர் நாங்கள் மீண்டும் அதனை சொல்லி கொண்டிருக்கின்றோம்.

ஆனால் திலீபன் அவர்களின் கோரிக்கைகளுக்கு அப்பால் இந்த 13வது திருத்ததிற்கு அப்பாலான தீர்வினை வழங்குவதற்கான அழுத்தங்களை வழங்குவதிலிருந்து இந்திய அரசாங்கம் தவறிவருகின்றது.

(Visited 3 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content