இலங்கை

கட்சி என்ற ரீதியில் உடன்படவில்லை, ஆனால் மக்களுக்காகவே செய்கிறோம் – சாகர!

கட்சி என்ற ரீதியில் நாம் உடன்படாவிட்டாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மக்கள் கேட்டதை பெற்றுக் கொள்கின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று (04.09) நடைபெற்ற வாரந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மக்கள் சலுகைகளை கோரவில்லை. அதிக வரி விதிக்க வேண்டும் என்றும் வரி வசூலை குறைக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.  எனவே அந்த கோரிக்கைகளை ஜனாதிபதி பின்பற்றி வருகிறார்.

“தெருக்களில் அரகலய போராட்டத்தை நடத்தி, இவற்றைக் கோரியவர்கள் தற்போது அவற்றைப் பெற்றுக் கொள்கின்றனர். கட்சி என்ற அடிப்படையில் தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு  நாங்கள் உடன்படவில்லை.

ஆனால் நாங்கள் மக்களுக்காக வேறு ஒரு பிரேரணையை முன்வைக்க முடிவு செய்துள்ளோம், அவர்கள் விரும்பினால் வாக்களிப்பார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் மக்கள் முன்னோக்கி செல்ல விரும்பினால், நாங்கள் அவர்களை அனுமதிக்கலாம். ஒரு ஜனநாயக நாட்டில், மக்களின் பார்வையை பொறுத்தே நாடு முன்னோக்கிச் செல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content