இலங்கை

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையர்களை சுற்றுலா வீசா வாயிலாக தொழிலுக்கு அனுப்புவது சட்டவிரோதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா வீசா வாயிலாக சர்வதேச நாடுகளுக்கு தொழில்வாய்ப்பிற்காக சென்று பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பட்சத்தில் எவ்வித பொறுப்பினையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்றுக்கொள்ளாது எனவும் அறிவித்துள்ளது.

அத்துடன் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலா வீசா மூலம் ஓமானுக்கு சென்று சித்திரவதைகளை அனுபவித்து வந்த ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உதவியுடன் இலங்கைக்கு மீண்டும் அழைத்துவரப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பாதிக்கப்பட்டவரின் மனைவியால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து குறித்த நபர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த நபரை சுற்றுலா வீசா மூலம் தொழிலுக்கு அனுப்பிய மத்துகம பகுதியை சேர்ந்த ஒருவர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்