புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

உயிர், உலகத்தின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் புகைப்படங்கள்….

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்கள் மகன்களின் பிறந்தநாளை மலேசியாவில் கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, கடந்தாண்டு ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்த 4 மாதத்திலேயே தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டதாக அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர் விக்கி நயன் ஜோடி. இதைப்பார்த்து எப்புட்ரா என ரசிகர்கள் ஷாக் ஆகினர். பின்னர் தான் அவர்கள் இருவரும் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து சினிமாவை சற்று ஓரம்கட்டிவிட்டு குழந்தையை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்த இந்த ஜோடி, கடந்த ஓராண்டாகவே குழந்தைகளின் முகத்தை வெளியுலகத்துக்கு காட்டாமல் இருந்து வந்தனர்.

கடந்த மாதம் இன்ஸ்டாகிராமில் எண்ட்ரி கொடுத்த நயன்தாரா, முதன்முறையாக தன் மகன்களின் முகத்தையும் வெளியுலகத்துக்கு காட்டினார்.

இந்நிலையில், விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்கள் மகன்கள் உயிர் மற்றும் உலகத்தின் முதல் பிறந்தநாளை மலேசியாவில் கொண்டாடி உள்ளனர்.

அங்குள்ள புகழ்பெற்ற டுவின் டவர் முன் மகன்களை தோழில் தூக்கி வைத்தபடி போட்டோ எடுத்து தன் மகன்களுக்கு ஸ்பெஷலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்கி.

அதேபோல் மற்றொரு பதிவில் தன் மகன்களை மனதில் வைத்து எழுதிய ஜெயிலர் படத்தில் இடம்பெறும் ரத்தமாரே பாடலில் ‘என் முகம் கொண்ட என் உயிரே, என் குணம் கொண்ட என் உலகே’ என தன் மகன்களின் பெயர்களோடு கூடிய வரிகளை பதிவிட்டு எமோஷனலாக வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் விக்கி.

மகன்களின் முதல் பிறந்தநாளுக்காக விக்கி நயன் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

 

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content