இலங்கை

கைதுக்குப்பின் சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம் குறித்து UNP கரிசனை!

அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கவலைகளை எழுப்பியுள்ளதுடன், அவருக்கு எதிராக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், சுரேஷ் சல்லே, இலங்கைச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட பாதுகாப்புகளுக்கு உரிமையுடையவர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளை விட, கைது செய்யப்பட்ட ஒரு நபர் நடத்தப்படும் விதத்தின் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எந்தவொரு சித்திரவதை அல்லது மனிதாபிமானமற்ற நடத்தையும் அரசியலமைப்பின் 11வது சரத்து மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு முரணானது என்றும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் கைதிகளுக்கு எதிரான சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தைகளுக்கு எதிரான பாதுகாப்புகளைக் கோரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) விதிகளையும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்