அறிந்திருக்க வேண்டியவை இலங்கை வாழ்வியல்

ஆடி மாத்தில் இரண்டு அமாவாசை.. யாரும் குழம்ப வேண்டாம்..

ஆடி மாத்திலே இரண்டு அமாவாசை வருகின்றது. இது தொடர்பாக யாருமே குழம்ப தேவையில்லை விளக்கம் தருகிறார் சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள்.

ஆடி அமாவாசை தொடர்பாக அவர் இன்று (10) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஆடி மாதத்திலே இரண்டு அமாவாசைகள் வருகின்றது. அதில் எது சரி எது தவறு என்று இரண்டு நிலையில் குழப்பத்தில் உள்ளனர். பஞ்சாங்கம் இரண்டும் ஆடி அமாவாசை என்றே போட்டுள்ளது என்று கூறுகின்றனர். இதில் எதை செய்ய வேண்டும் என்ற கேள்வியும் உண்டு.

யாருமே குழம்ப வேண்டிய தேவை இல்லை இவ்வாறு வருவது இது முதல் தடவையும் அல்ல. இரண்டு அமாவாசையோ இரண்டு பௌர்ணமிகளோ வந்தால் அந்த மாதம் மலமாதம் என்று அழைக்கப்படும்.

அந்த மாதங்களில் எந்த சுபகாரியங்களும் செய்ய மாட்டார்கள். திதிகள் இரண்டு வருவது அவை கூடுகின்ற நாளிகைகளை பொறுத்தது. எனவே இரண்டு திதி வந்தால் அந்த மாதத்தில் நாம் இரண்டாவதாக வருகின்ற திதி எதுவோ அதனைக் கொள்வது தான் முறை என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

திதிகள் இரண்டு வருவதும் நட்சத்திரங்கள் இரண்டு வருவதும் அவை கூடுகின்றதைப் பொறுத்தே அமைகின்றது.

அதனாலே நாம் எந்த ஐயப்பாடுகள் அடையத்தேவை இல்லை இந்த முறை ஆடிமாத்திலே வருகின்ற இரண்டு அமாவாசைகளில் இரண்டாவதாக வருகின்ற அமாவாசையே ஆடி அமாவாசை ஆகும் அதுவே விரதநாளும் ஆகும். அன்றே விரதமிருந்து தர்ப்பணங்கள் செய்வதற்குரிய நாளுமாகும்.

எனவே 15.08.2023 அன்று இரண்டாவதாக வருகின்ற அமாவாசையினை விரதநாளாக கொள்வது தான் சரியும் சாஸ்திர பூர்வமானதுமாகும்.

எனவே இந்த நாளில் விரதமிருந்து தர்பணங்கள் செய்து கொள்ளலாம். எனவே நீங்கள் வழமை போல முன்னோர்கள் வழிபாடுகளை இயற்றிக்கொள்ளலாம்.

(Visited 20 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content