ஐரோப்பா

ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளான துருக்கி விமானம் – 20 பேர் பலி

அசர்பைஜானில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த துருக்கி விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விமானத்திலிருந்த 20 பேரும் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துருக்கியின் C-130 ரக இராணுவச் சரக்கு விமானம் ஒன்றே இதன் போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விமானம் துருக்கிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்டோகன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்