உலகம் செய்தி

அமெரிக்காவில் உணவு திட்டத்திற்கு நிதியளிப்பதை நிறுத்திய ட்ரம்ப் – உச்சநீதிமன்றத்தின் உத்தரவு!

உணவு முத்திரைகள் என்றும் அழைக்கப்படும் துணை ஊட்டச்சத்து உதவித் ( Snap) திட்டத்திற்கு நிதியளிப்பதை இடைநிறுத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மில்லியன் கணக்கான குறைந்த வருமானம் கொண்ட அமெரிக்கர்கள் நலன் பெறும் குறித்த திட்டத்திற்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கீழ் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை  தீர்ப்பளித்திருந்தது.

குறித்த தீர்ப்பை எதிர்த்து வெள்ளை மாளிகை அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தது. இந்நிலையிலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தற்போது நடத்தி வரும் பணிநிறுத்தத்தால் இந்தத் திட்டம் இழுபறியில் உள்ளது, ட்ரம்ப் நிர்வாகம் அதற்கு ஓரளவு நிதியளிக்க மட்டுமே முடியும் என்று வாதிடுகிறது.

இதன்படி  குறித்த திட்டத்திற்கு  4 பில்லியன் டொலர்கள் வரை நிறுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

Snap திட்டத்தை ஏறக்குறைய 42 மில்லியன் அமெரிக்கர்கள் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு மாதமும் இதற்காக 9 பில்லியன் டொலர் வரை செலவிடப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் பணிநிறுத்த நடவடிக்கைகளால் மக்கள் பலர் உணவின்றி தவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி