உலகம் செய்தி

அமெரிக்காவின் புதிய வரி தீர்மானம் -சர்வதேச சந்தையில் பதற்றம்

அமெரிக்காவின் புதிய 15% உலகளாவிய வரி அறிவிப்பு, சர்வதேச வர்த்தக தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.

ஏற்கனவே 10% வரி ஒப்பந்தத்தில் இணைந்திருந்த நாடுகள், தங்களது பொருளாதார நலன்கள் பாதிக்கப்படுமா என்ற கவலையில் இருக்கலாம். குறிப்பாக வர்த்தக ஒப்பந்தங்களின் சட்டபூர்வ நிலை குறித்த கேள்விகள் எழும் வாய்ப்பு உள்ளது.

அமெரிக்காவுடன் 10% வரி ஒப்பந்தம் மேற்கொண்ட நாடுகளுக்கு சர்வதேச ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கே சிக்கல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 10% அமெரிக்க இறக்குமதி வரிகளை இரத்து செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகளாவிய வரிகளை 15% ஆக உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த புதிய 15% வரி 1974 வர்த்தகச் சட்டம் பிரிவு 122 இன் கீழ் தற்காலிகமாக அமுல்படுத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

அமெரிக்க உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு, ட்ரம்ப் உலகளாவிய வரிகளை அறிமுகப்படுத்திய போது IEEPA 1977 சட்டத்தின் கீழ் தனது அதிகாரங்களை மீறியதாக கூறியது. 6–3 என்ற வாக்கெடுப்பில் தீர்ப்பு வியாழக்கிழமை வெளிவந்தது.

இதன்பின்னர் ட்ரம்ப், நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தார். சில நீதிபதிகளை “முட்டாள்கள்” என்றும் கூறினார்.

இதன் மூலம், அமெரிக்கா ஏற்கனவே $130 பில்லியன் (£96.4 பில்லியன்) வரி வசூலித்துள்ளதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தற்போது பல நாடுகள் சட்ட ரீதியாக சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என கூறப்படுகிறது.

இந்நிலை தொடருமானால், பாதிக்கப்படும் நாடுகள் சட்ட ரீதியான நடவடிக்கைகள், பதிலடி வரிகள் அல்லது அவசர வர்த்தக பேச்சுவார்த்தைகள் போன்ற விருப்பங்களை பரிசீலிக்கலாம்.

இது உலகளாவிய வர்த்தக உறவுகளில் புதிய பதற்றத்தையும், பொருளாதார மாற்றங்களையும் உருவாக்கும் சூழ்நிலையை உருவாக்கக்கூடும்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி