ஐரோப்பா

ஜெர்மனியில் கடுமையாகும் சட்டம் – அகதி விண்ணப்பம் செய்தவர்களுக்கு நெருக்கடி

ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் செய்தவர்களுக்கு சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உச்சி மாநாட்டில் அகதிகள் விடயத்தில் கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த புதிய நடைமுறையின் படி நிராகரிக்கப்பட்ட அகதிகளை உடனடியாக நாடு கடத்துவதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் சில தீர்மானங்களை அவர்கள் எடுத்து இருந்தார்கள்.

இதன் அடிப்படையில் இவ்வாறு அகதி விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் காலமானது 3 மாதம் என்றும், இந்நிலையில் எவர் ஒருவரின் அகதி விண்ணப்பம் முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையில் தொடர் அகதி விண்ணப்பங்களை மேற்கொள்கின்ற நடைமுறையும் புதிய சட்டத்தின் மூலம் இரத்து செய்யப்படும் என்றும் தெரியவந்து இருக்கின்றது.

இந்நிலையில் ஜெர்மனியின் பிரதான் எதிர்கட்சியான CDUCS கட்சியானது ஐரோப்பாவினுடைய வெளி எல்லை குறிப்பாக ஆப்பிரிக்காவில் வைத்து அகதிகள் விண்ணப்பத்தை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து இருந்தது.

(Visited 7 times, 1 visits today)
See also  சவுத் ஹாரோவில் இரண்டு திருட்டுச் சம்பவங்கள்: பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content