ஐரோப்பா

பிரான்ஸில் கடுமையாகும் சட்டம் – ஜனாதிபதி அதிரடி உத்தரவு

பிரான்ஸில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்துக்காக கைது செய்யப்படுபவர்கள் தங்களுக்கான குற்றப்பணத்தை உடனடியாக செலுத்த நேரிடும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் எச்சரித்துள்ளார்.

“போதைப்பொருள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் இருக்கும் வரை நாம் அதன் விற்பனையாளர்கள் தொடர்பாக நாம் வருத்தப்பட முடியாது” என ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்தோடு போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கான சில இறுக்கமான சட்டங்களையும் அறிவித்தார்.

இந்த கோடைகாலத்தின் நிறைவில் இருந்து, போதைப்பொருள் பாவனையாளர்கள் தங்களுக்கான குற்றப்பணத்தை தாமதமின்றி உடனடியாக செலுத்த நேரிடும் எனவும், பணமாகவோ அல்லது வங்கி அட்டைகளூடாகவோ இந்த தொகையை செலுத்த நேரிடும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

போதைப்பொருள் புழக்கத்தை தடுத்து நிறுத்த புதிய கட்டுப்பாடுகள் மற்றும் இறுக்கமான சட்டங்கள் கொண்டுவரப்படுவது தொடர்பிலும் ஜனாதிபதி மக்ரோன் அறிவித்தார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்