இலங்கை செய்தி

தத்துசேன மன்னரின் கிரீடத்தை தேடியவர்கள் கைது

தத்துசேன மன்னனுக்கு சொந்தமானது என கூறப்படும் கிரீடத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஐவரை, சேருநுவர வனப்பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சேருநுவர பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மீரிகம, அலபத்த, புலத்சிங்கள, கம்பஹா, கொட்டுகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் விசாரணையின் போது, ​​இந்தக் குழுவில் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க சூனியக்காரியும் இருப்பதாகவும், பழங்கால புஸ்கோல புத்தகத்தில் உள்ள விவரத்தின்படி கிரீடத்தைத் தேடி காட்டிற்கு வந்ததாகவும் சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content