ஆசியா செய்தி

“இது இஸ்ரேலுக்கு இருண்ட நேரம் – நீங்கள் வெல்ல வேண்டும்”: என இஸ்ரேல் பிரதமருடனான சந்திப்பின் போது சுனக் திட்டவட்டம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகிய இருவருக்கும் இடையேயான சந்திப்பு இன்று நடைபெற்றது.

இரண்டாம் உலக போர் தீவிரமாக நடைபெற்ற காலகட்டத்தில் தனது நாட்டின் இறையாண்மையை குறித்து முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தில் இருந்த அப்போதைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்,

“இது இருண்ட காலம்” என வர்ணித்ததை குறிப்பிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, தற்போதைய நிலையை “இது இஸ்ரேலின் இருண்ட காலம் மட்டுமல்ல; உலகத்தின் இருண்ட காலம்” என கூறியுள்ளார்.

நேதன்யாகுவுடனான சந்திப்பு நிறைவடைந்ததும் பேசிய ரிஷி சுனக் தெரிவித்ததாவது:

இஸ்ரேல் தற்போது அதன் வரலாற்றில் முதல்முறையாக இருண்ட காலகட்டத்தை (darkest hour) சந்தித்து வருகிறது. தன்னை பாதுகாத்து கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு நிச்சயம் உண்டு. சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தன் தேச இறையாண்மையை காக்க இஸ்ரேல் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் இங்கிலாந்து துணை நிற்கும்.

ஒரு நீண்ட போருக்கு இஸ்ரேலுக்கு நீடித்த ஆதரவு தேவைப்படுகிறது. உங்களுடன் இந்த இருண்ட காலத்தில் நண்பனாக துணை நிற்பதில் பெருமையடைகிறேன். உங்களுடன் ஒன்றுபட்டு நிற்கிறோம். நீங்கள் நிச்சயம் வெற்றி அடைய வேண்டும்; நீங்கள் வெல்வதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.

இவ்வாறு ரிஷி சுனக் தெரிவித்தார்.

இஸ்ரேல் சுற்றுப்பயணம் முடிந்ததும் ரிஷி சுனக், சவுதி அரேபியா செல்ல உள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content