அமைச்சரவையில் பல முட்டாள்கள் உள்ளனர் – பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க
![](https://iftamil.com/wp-content/uploads/2023/05/zdfyh-1-jpg.webp)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தற்போதைய நிலைப்பாடு குறித்து தனக்கு தெரியாது என வலியுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க, அரசாங்கத்தில் சும்மா உட்காரத் தயாராக இல்லை என எச்சரித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதியுடன் அல்லது அரசாங்கத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களுடன் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க தெரிவித்தார்.
“இருப்பினும், அமைச்சரவையில் பல முட்டாள்கள் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.
அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை கட்டியெழுப்பவும், தேர்தல் வெற்றியை பெற்றுத்தரவும் ஐந்து வருடங்களாக அயராது உழைத்தேன். எனது இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில், அரசாங்கத்தில் உள்ளவர்களுடன் எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அமைச்சரவையில் பல முட்டாள்கள் உள்ளனர். அவருடன் எனக்கு பல பிரச்சினைகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்கத்துடன் தமக்கு கருத்து வேறுபாடு இல்லையென்றாலும், அரசாங்கத்தில் சும்மா இருப்பதில் தாம் மகிழ்ச்சியடையவில்லை என திஸாநாயக்க மீண்டும் வலியுறுத்தினார்.