உலகம்

3 நாட்களாக லிஃப்டிற்குள் சிக்கித் தவித்த இளம் பெண்! இறுதியில் நடந்தது என்ன?

லிஃப்டிற்குள் 3 நாட்களாக சிக்கித் தவித்த இளம் பெண் ஒருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்துள்ளது. இங்கு தாஷ்கண்ட் மாகாணத்தை சேர்ந்த ஓல்கா லியோன்டிவா என்பவர் கடந்த ஜூலை 24 ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.

பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பாததால் அச்சத்திற்குள்ளான அவரது உறவினர்கள் போலீசாரிடம் தகவல் அளித்தனர்.

இந்த நிலையில் 3 நாட்களுக்கு பின்னர் லியோன்டிவாவை போலீசார் சடலமாக மீட்டுள்ளனர்.

ஜூலை 24 ஆம் திகதியன்று லியோன்டிவா 9 மாடி கட்டிடத்தில் உள்ள லிஃப்டில் ஏறியுள்ளார். எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறால் லிஃப்ட் பாதியிலேயே நின்றுள்ளது. அதற்குள் அடைபட்ட நிலையில், லியோன்டிவா கத்தி கூச்சலிடடுள்ளார். இருப்பினும் வெளியில் இருந்து அவருக்கு உதவி கிடைக்கவில்லை.

மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட லியோன்டிவாவால் 3 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் உயிரிழந்துள்ளார். அவருக்கு 6 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.

இது தொடர்பாக சீனாவை சேர்ந்த லிஃப்ட் நிறுவனத்தின் மீது போலீஸ் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மனதை பதைபதைக்கும் வகையில் லிஃப்டில் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று கடந்த 26 ஆம் தேதி இத்தாலியில 61 வயதாகும் பெண் ஒருவர் மின் தடை ஏற்பட்டதால் லிஃப்டில் சிக்கி உயிரிழந்தார். 2 மாடிக்கு இடையே மாட்டிக் கொண்டு அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content