ஐரோப்பா

பிரான்ஸில் கணவனால் நரக வாழ்க்கையை வாழ்ந்த பெண் : 50 ஆண்கள் அரங்கேற்றிய கொடூரம்!

கடந்த 2011 ஆம் ஆண்டில் பிரான்ஸை உலுக்கிய ஒரு கற்பழிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தெற்கு பிரான்சை சேர்ந்த டொமினிக் பெலிகாட், என்ற நபர் தனது மனைவிக்கு   போதைப்பொருள் கொடுத்து, மயக்கமடைந்த நிலையில், குறைந்தபட்சம் 50 ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட கணினி கோப்பில் 20,000 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் தாக்குதல்களின் வீடியோக்கள் இருந்தன என்று Le Monde தெரிவித்துள்ளது.

குறித்த 50 ஆண்களில்குற்றம் சாட்டப்பட்டவர்களில் தீயணைப்பு வீரர், பத்திரிகையாளர் மற்றும் சிறைக் காவலர் ஆகியோர் அடங்குவர்.

தான் சிறுவனாக இருந்தபோது ஆண் செவிலியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறும் டொமினிக் பி, “தனது குடும்பம் மற்றும் மனைவியை” எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்