தமிழ்நாடு

புனித தலத்தில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த திடுக்கிடும் சம்பவம்!

திருநெல்வேலியில் தர்காவில் பெண் ஒருவர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போது, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளயத்தை சேர்ந்த இம்ரான்கான் (32) என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.இவருக்கும் நெல்லை டவுன் முகமது அலி தெருவை சேர்ந்த ஹசீனா பேகம்(28) ஆகிய இருவருக்கும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹசீனா பேகம், கணவரை விட்டு பிரிந்து தன் தாயார் பாத்திமா பேகத்தின் வீட்டுக்கு குழந்தைகளோடு சென்றுள்ளார்.இதற்கிடையே நேற்று இம்ரான்கான் தனது மனைவியை பார்ப்பதற்காக, ஹசீனாவின் தாயாரது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மனைவியுடன் அன்பாக பேசியதோடு, மன வருத்தமாக உள்ளதால் தொழுகை நடத்த செல்வோம் என்று கூறியுள்ளார்.

நம்பி வந்த மனைவியை கொன்ற கணவன்! புனித தலத்தில் நடந்த திடுக்கிடும் சம்பவம்

 

இதனை தொடர்ந்து இருவரும் அருகிலிருக்கும் தர்காவிற்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். அப்போது ஹசீனா பேகம் கண்களை மூடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்த சமயத்தில், அவரது கணவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார்.இம்ரான்கான் உடனே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார், ஹசீனாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தர்காவில் சென்று பார்க்கும் போது, ஹசீனா உயிரிழந்த நிலையில் கிடந்திருக்கிறார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே இம்ரான்கான் அருகிலுள்ள காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.பின்னர் அவரை பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொலிஸார், அவர் மீது வழக்கு பதிவு செய்து கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பட்டப்பகலில் புனித தலமான தர்காவிற்குள் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 15 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content