செய்தி

“வடக்கு, கிழக்கில் முகாம்கள் இருப்பதே தமிழர்களுக்கு பாதுகாப்பு” – மஹிந்த அணி கண்டுபிடிப்பு!

” வடக்கு, கிழக்கில் படை முகாம்கள் இருப்பதாலேயே தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார Shantha Bandara தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“சுதந்திரம் என்பது அபிமானம். அதன் கம்பீரத்தன்மையைக் குறை மதிப்புக்கு உட்படுத்தக்கூடாது. உலகில் எந்தவொரு நாடும் அவ்வாறு செய்யாது.

ஆனால் இலங்கையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் சுதந்திரத்தினத்தின் கம்பீரத்தன்மை இல்லாமல் போயுள்ளது. செலவுகளை கட்டுப்படுத்துகின்றோம் என்ற போர்வையில் அபிமானம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

படையினரின் வீரதீர செயல்கள் பற்றி பேசப்படவில்லை. நாட்டில் இன்று அவசரகால சட்டம் அமுலில் உள்ளது. இந்நிலையில் வடக்கு, கிழக்கில் கறுப்பு கொடி ஏற்றப்படுகின்றது. இதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

இராணுவ முகாம்கள் , பொலிஸ் (வடக்கு, கிழக்கில்) இருப்பதால்தான் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சியவற்றையும் அகற்றினால் பொலிஸையும் அகற்றுமாறு கோருவார்கள்.” – சாந்த பண்டார

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி