ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலிய பிரதமருக்கு அதிர்ச்சி கொடுத்த மர்ம நபர்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுக்கு சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் விடுத்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிஸ்பேனின் மோர்டன் விரிகுடாவில் உள்ள ஒரு வீட்டில் வைத்து மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸ் அதிகாரிகள் நேற்று காலை செயல்படுத்திய தேடுதல் பிடியாணையில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.

அல்பானீஸுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுக்க Carriage சேவையைப் பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சந்தேக நபர் பிரிஸ்பேன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக AFP ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தக் குற்றத்திற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி