இலங்கை

பச்சை குத்துவதால் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

பச்சை குத்துவதில் கட்டுப்பாடுகள் இல்லாததன் காரணமாக எயிட்ஸ் உள்ளிட்ட சமூக நோய் தாக்கம் அதிகரிக்கவும் வேறு பல நோய்கள் பரவுவதற்கும் வாயப்புள்ளது என இலங்கை பச்சை குத்தும் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படாததாலும் நிறுவனங்கள் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததாலும் இந்த நிலை அதிகரித்துள்ளதாகவும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் கிட்டத்தட்ட ஐயாயிரம் பச்சை குத்தும் நிறுவனங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 140 நிறுவனங்கள் மட்டுமே பச்சை குத்தும் சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களில் அறுவை சிகிச்சை அறை வசதிகள் இருக்க வேண்டும் என்றும் அனைத்து உபகரணங்களும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பச்சை குத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஊசி வகைகளை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றாலும் சில நிறுவனங்கள் அவற்றை கிருமி நீக்கம் செய்யாமல் பல முறை பயன்படுத்துவதாகவும் அந்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தேசிய STD மற்றும் AIDS  திட்டமும் பச்சை குத்துவது பல்வேறு நோய்களை தாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்று கூறுகிறது என அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content